close
Choose your channels

கமல், விஜய், அஜீத் நாங்க எல்லோரும் ஒரே குடும்பம். சிம்பு

Wednesday, August 19, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடித்த வாலு' திரைப்படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் செய்தியாளர்களுக்கு கேள்விகளுக்கு சிம்பு பதிலளித்தார். அப்போது அஜீத் ரசிகரான உங்களுக்கு விஜய் உதவி செய்தது குறித்து கேட்டப்போது, "'வாலு பிரச்சனைக்காக நான் யாரிடமும் உதவி கேட்கவில்லை. ஆனால் விஜய் தானாகவே முன்வந்து 'வாலு' பட ரிலீஸுக்கு உதவி செய்தார். அதே நேரத்தில் சிம்பு எந்த பிரச்சனையும் பார்த்துப்பான் என்று அஜீத் நம்பிக்கை தெரிவித்தார். விஜய், அஜீத், கமல் என நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பம். யாருக்காவது பிரச்சனை ஏற்பட்டால் நாங்கள் எல்லோருமே முன்னாடி வந்து நிற்போம்' என்று கூறினார்.

மேலும் நடிகர் சங்க தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்விக்கு பதிலளித்த சிம்பு, "சரத்குமார் நடிகர் சங்கத்திற்கு நிறைய உழைத்துள்ளார். எனது ஆதரவு எப்போதுமே அவருக்கு உண்டு. ஆனாலும் விஷால், விஷ்ணு, கார்த்தி ஆகியோர்களும் எனது நண்பர்கள்தான். அணிகள் என்று இல்லாமல் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று கூறியுள்ளார்.

மேலும் ரஜினியின் சந்திப்பு குறித்து சிம்பு கூறியபோது மூன்று வருட இடைவெளிக்கு பின் வாலு' படம் வந்தாலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, இந்த வரவேற்பை அப்படியே தக்க வைத்து கொள் என ரஜினி அறிவுரை கூறியதாகவும், அவருடனான சந்திப்பு தனக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்ததாகவும் சிம்பு கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.