close
Choose your channels

ஆன்மீக குருவை 3வது திருமணம் செய்து கொண்ட இம்ரான்கான்

Monday, February 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன், பாகிஸ்தான் அணிக்கு உலகக்கோப்பையை பெற்றுத்தந்த கேப்டன், பாகிஸ்தான் தெஹ்ரிக் - இ - இன்சாப் என்ற அரசியல் கட்சியின் தலைவர் இம்ரான்கான் ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது அவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இம்ரான்கான் கடந்த 1995ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கோடீஸ்வரரின் மகளான ஜெமிமா கோல்ட்ஸ்மித் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் பிறந்த நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பின்னர் கடந்த 2015ஆம் ஆண்டு பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரேகம்கான் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணமும் ஒருசில மாதங்களில் முடிவுக்கு வந்தது

இந்த நிலையில் 65 வயதான இம்ரான்கான், பஸ்ரா மனேக்கா என்னும்  பெண்ணிடம் சில ஆண்டுகளுக்கு முன் ஆன்மீக ஆலோசனை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. ஆன்மீக குருவான இவருடன் இம்ரான்கானுக்கு காதல் மலர்ந்த நிலையில் இருவரும் . லாகூரில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் இம்ரான்கான் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.