close
Choose your channels

திருநங்கையாக மாறிய மகன்… தாயே ஆள் வைத்து அடித்துக்கொன்ற அவலம்!

Tuesday, December 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் திருநங்கையாக மாறிய தனது மகனால் அவமானம் தாங்கமுடியாத தாய் ஒருவர், சொந்த மகனையே ஆள் வைத்து அடித்துக்கொன்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கணவரைப் பிரிந்து தனியாக வசித்துவரும் உமாதேவி(45) என்பவர் 19 வயதான தனது மகன் நவீன்குமாரை கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நவீன்குமார் உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து நவீன்குமார்ருக்கு எப்படி அடிப்பட்டது என மருத்துவர்கள் உமாதேவியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் உமாதேவி முன்னுக்குப்பின் பதில் அளித்ததைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் அனுப்பப்பட்டது. இதனால் உமாதேவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் நவீன்குமார் திருநங்கையாக மாறியது தனக்கு பிடிக்கவில்லை என்றும் தனக்கு அவமானமாக இருப்பதாகவும் கூறிய அவர், தொடர்ந்து நவீன்குமார் பெங்களூரு செல்லாமல் தடுக்க வேண்டி கை, கால்களை முறிக்க நினைத்து ஆட்களை ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால் கை, கால்களை முறிக்க வந்த 5 பேர், நவீன்குமாரை சரமாரியாக தாக்கியதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்த உமாதேவி மற்றும் அவர் ஏற்பாடு செய்த 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். திருநங்கையாக மாறுவது பிடிக்காமல் சொந்த தாயே செய்த இந்த காரியம் தற்போது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.