close
Choose your channels

ரஜினிக்கு எதிராக தொடரப்பட்ட இன்னொரு வழக்கு வாபஸ்!

Tuesday, January 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் விழாவில் பெரியார் குறித்து அவமரியாதையாக பேசியதாக சென்னை ஐகோர்ட்டில் பெரியார் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கை பெரியார் ஆதரவாளர்கள் திடீரென வாபஸ் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ரஜினிக்கு எதிராக கடந்த 2014 ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கும் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் மீது கடந்த 2014ஆம் ஆண்டு வருமான வரித்துறை வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தான் தற்போது வருமான வரித்துறை வாபஸ் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதுகுறித்து விசாரணை நடைபெற்றபோது நடிகர் ரஜினிக்கு எதிராக 2014ல் தொடரப்பட்ட வழக்கை வழக்கை திரும்பப் பெற அனுமதித்து, வருமான வரித்துறை மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.