close
Choose your channels

'இந்தியன் 2' விபத்து: கிரேன் ஆபரேட்டர் தலைமறைவால் பரபரப்பு

Thursday, February 20, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ராட்சத கிரேன் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தினால் 3 பேர் பலியாகினர் என்பதும் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கமலஹாசன் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த விபத்து கிரேன் ஆபரேட்டரின் கவனக்குறைவால் தான் நடந்ததாக கூறப்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கிரேன் ஆபரேட்டர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் கிரேன் ஆபரேட்டர் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிரேன் ஆபரேட்டரை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டால் இந்த விபத்து குறித்து மேலும் சில தகவல்கள் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.