தங்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு மீண்டும் வெண்கலம்! குவியும் வாழ்த்துக்கள்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே தங்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு இன்று வெண்கல பதக்கம் கிடைத்துள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
தற்போது டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராஒலிம்பிக் போட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவைச் சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து அவருக்கு பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்
இந்த நிலையில் சற்று முன்னர் பாரா ஒலிம்பிக் போட்டியில் நடந்த 50 மீட்டர் ரைபிள் பிரிவில் அவனி லெகாரா வெண்கலம் வென்றார். இதனை அடுத்து பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெண்கலம் என இரண்டு பதக்கங்களை வென்ற ஒரே இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இதுவரை 12 பதக்கங்கள் கிடைத்துள்ளது என்பதும் அதில் 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என்பதும் மேலும் பதக்கப் பட்டியலில் இந்தியா 36 வது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.