close
Choose your channels

பிரக்ஞானந்தாவின் தாய்க்கு வாழ்த்து தெரிவித்த செஸ் வீராங்கனை.. நெகிழ்ச்சியான பதிவு..!

Tuesday, August 22, 2023 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது என்பதும் 206 விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று நடந்த முக்கிய போட்டியான அரையிறுதி போட்டியில் பிரக்ஞானந்தா முதல் சுற்றில் டிரா செய்தார். இதனை அடுத்து இரண்டாவது சுற்றும் டிரா ஆனதை அடுத்து, மூன்றாவது சுற்று உலகின் மூன்றாம் நிலை வீரரான பேபியானோ கருவானா வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

நாளை இறுதிப் போட்டியில் நடைபெற உள்ளது என்பதும் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சென் என்பவரை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளைய போட்டியில் அவர் வென்றுவிட்டால் உலக சாம்பியன்ஷிப் பட்டம் அவருக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள பிரக்ஞானந்தாவுக்கு இந்தோனேசியா நாட்டின் செஸ் வீராங்கனை ஐரின் சுகந்தர் என்பவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதை விட அவரது தாய்க்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும், அவர் இல்லாமல் இது எதுவும் நடந்திருக்காது என்றும் நெகிழ்ச்சியுடன் அவர் பதிவு செய்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.