close
Choose your channels

கொரோனா பாதிப்பு எதிரொலி: ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?

Monday, March 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் திருவிழா இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி தொடங்க உள்ளது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் முதல் போட்டியாக சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் போட்டி நடைபெறவுள்ளது என்பதும், இந்தப் போட்டிக்காக சென்னை அணியினர் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி இதுவரை 41 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐபிஎல் போன்று ஆயிரக்கணக்கானோர் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவ வாய்ப்பு இருப்பதால் ஐபிஎல் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். இதனை ஏற்று ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு பிசிசிஐ விரைவில் தெரிவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.