close
Choose your channels

ஜோதிகா போல் ரீஎண்ட்ரி ஆகிறாரா ஷாலினி அஜித்? வைரல் புகைப்படங்கள்!

Monday, May 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ஜோதிகா போல ஷாலினியும் சினிமாவில் ரீஎன்ட்ரி ஆகப்போகிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர் .

நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின்னர் ஒரு இடைவெளி விட்டு குழந்தைகள் வளர்ந்த பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்பதும், தற்போதும் அவர் பிஸியான நடிகையாக உள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 2000ம் ஆண்டு அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஷாலினிக்கு, அனோஷ்கா, ஆத்விக் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் இருவரும் தற்போது நன்றாக வளர்ந்து விட்டனர் .

இந்த நிலையில் ஷாலினியின் சமீபத்திய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக தங்கை ஷாம்லியுடன் எடுத்த புகைப்படங்கள் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இந்த புகைப்படத்திற்கு ஷாலினி மீண்டும் நடிக்க வரலாமே என்ற எண்ணத்தை ரசிகர்கள் கமெண்ட்ஸ் மூலம் எழுப்பி வருகின்றனர். ஆனால் அஜித் மற்றும் ஷாலினி என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.