close
Choose your channels

மிரட்டப்பட்டாரா சுரேஷ் சக்கரவர்த்தி?

Monday, January 18, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி இறுதிப் போட்டி வரை செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நான்காவது வாரம் வெளியேற்றப்பட்டார். இருப்பினும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் எவிக்ட் செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களும் உள்ளே நுழைந்தபோது சுரேஷ் சக்கரவர்த்தி மட்டும் செல்வதில் சிக்கல் இருந்ததாகவும் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது

இருப்பினும் கடைசி ஒரு சில மணி நேரங்கள் இருக்கும்போது சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இறுதி போட்டி நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் அவர் உரையாடியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் சட்டம், ஒப்பந்தங்கள் ஆகியவை சில நேரங்களில் அல்லது பல நேரங்களில் நம்மை மிகவும் காயப்படுத்துகிறது. ஆனால் ’ஆண்டவர்’ போன்ற தூய்மையான ஆன்மாக்கள் இருப்பது நமக்கு நல்ல மருந்தாக உள்ளது என்று கூறியுள்ளார்

இதிலிருந்து அவர் ஒப்பந்தங்களை காட்டி மிரட்டப்பட்டாரா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். இவ்வளவு வருத்தத்துடன் சுரேஷ் சக்கரவர்த்தி ட்வீட் பதிவு செய்ய என்ன காரணம்? என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் அவரை கேள்வி கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.