close
Choose your channels

'ஜெய்பீம்' படத்திற்கு ஆஸ்கார் உறுதி: சொன்ன உலக பிரபலம் யார் தெரியுமா?

Tuesday, February 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில் உருவான ’ஜெய்பீம்’ திரைப்படம் ஆஸ்கார் போட்டிக்கு செல்வது உறுதி என சர்வதேச பிரபலம் ஒருவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடிப்பில் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ’ஜெய்பீம்’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு ஒருசில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் இந்த படத்தை வரவேற்றனர் என்பதும் இந்த படத்திற்கு தமிழக முதல்வர் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ’ஜெய்பீம்’ படம் இடம் பெற்றது என்பதும், பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுக்கு 276 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் ஒன்றாக ’ஜெய்பீம்’ திரைப்படம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் போட்டிக்கான பட்டியல் நாளை வெளியாக உள்ள நிலையில் ஆஸ்கர் கமிட்டியின் சார்பில் கலந்துரையாடல் ஒன்று சமீபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சர்வதேச பிரபலமான ஜாக்குலின் கோலே என்பவர் நாளை ஆஸ்கர் பட்டியலில் இடம்பெறும் படங்களில் ஒன்றாக ’ஜெய்பீம்’ இருக்கும் என்றும் அந்த படத்திற்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது கிடைக்கும் என்றும் என்னை நம்புங்கள் என்றும் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.