close
Choose your channels

'ஜெய்பீம்' படத்தில் நடித்த குழந்தைக்கு டிசி வழங்கப்பட்டதா? பெற்றோர் விளக்கம்!

Saturday, November 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’ஜெய்பீம்’ படத்தில் நடித்த சிறுமிக்கு பள்ளி நிர்வாகம் டிசி கொடுத்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் விளக்கம் அளித்துள்ளனர்.

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தில் ராஜ்கண்ணு - செங்கனி மகளாக அல்லி என்ற கேரக்டரில் குழந்தை நட்சத்திரம் ஒருவர் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்த குழந்தையை டிசி வாங்கச் சொல்லி பள்ளி நிர்வாகம் வலியுறுத்தியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது.

இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள குழந்தையின் பெற்றோர் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரவி வருவதாகவும், பள்ளியில் உள்ள அனைவருமே குழந்தையை ஆதரிக்கின்றனர் என்றும், பள்ளி நிர்வாகம் டிசி வாங்க சொல்லி வற்புறுத்தியதாக வெளிவந்திருக்கும் தகவலில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ’ஜெய்பீம்’ படத்தில் மிக சிறப்பாக நடித்த குழந்தை நட்சத்திரத்திற்கு மேலும் திரையுலகில் வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.