close
Choose your channels

'தனி ஒருவன் 2' படப்பிடிப்பு எப்போது? இசையமைப்பாளர் மாற்றமா?

Monday, December 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜெயம் ரவி நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் உருவான ’தனி ஒருவன்’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு அரவிந்த்சாமி வில்லன் கேரக்டரில் நடித்தது ஒரு முக்கிய காரணம் என்ற நிலையில் முதல் பாகத்தில் அவரது கேரக்டர் இறந்துவிடும் என்பதால் இரண்டாம் பாகத்தில் அவருக்கு இணையாக ஒரு வில்லன் கேரக்டரை தேர்வு செய்வதில் இயக்குனருக்கு பெரும் சவாலாக இருப்பதாக கூறப்படுகிறது.

பாலிவுட் திரையுலகில் இருந்து வில்லன் கேரக்டருக்கு நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த நயன்தாரா இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்றும் கூறப்படும் நிலையில் முதல் பாகத்திற்கு இசையமைத்த ஹிப்ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கும் இசையமைப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த படத்திற்கு இசையமைக்க வேறு சில இசையமைப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஆனால் அதே நேரத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதியும் பரிசீலனையில் இருப்பதாகவும் தெரிகிறது,

ஜெயம் ரவி தற்போது ’பிரதர்’ மற்றும் ’ஜெனி’ ஆகிய படங்களிலும் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் ’காதலிக்க நேரமில்லை’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு அவர் ’தனி ஒருவன் 2’ படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.