close
Choose your channels

கோவிலில் பிச்சையெடுத்த 'காதல்' பாபுவுக்கு மறுவாழ்வு கிடைக்குமா?

Friday, June 30, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாலாஜி சக்திவேல் இயக்கிய 'காதல்' படத்தில் நடித்த விருச்சிககாந்த் என்ற பாபு, வறுமையின் பிடியில் சிக்கி கோவில் ஒன்றில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருவதாக கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் இந்த செய்தியை கேள்விப்பட்டு உடனடியாக நடிகர்கள் மோகன் மற்றும் தீனா ஆகியோர் பாபுவை மீட்டுள்ளனர். தற்போது பாபு, தீனா வீட்டில் தங்கியிருப்பதாகவும், அவருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் வீடியோ ஒன்றில் மோகன் மற்றும் தீனா குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பாபுவுக்கு மனநிலை சரியில்லை என்று கூறப்பட்டது தவறு என்றும், அவருக்கு மன அழுத்தம் அதான் உள்ளதாகவும், அதை விரைவில் சரிப்படுத்திவிட முடியும் என்றும் மேலும் இந்த வீடியோவை பார்க்கும் உதவி இயக்குனர்கள், இயக்குனர்கள் பாபுவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் மோகன் மற்றும் தீனா அந்த வீடியோவில் கூறியுள்ளனர்.

நடிச்சா ஹீரோதான் சார், அப்புறம் அரசியல், சி.எம்., பி.எம். என்று பாபு பேசிய காமெடி வசனம் பல வருடங்களுக்கு பிரபலமாக இருந்தது. ஆனால் தற்போது அவரது நிலைமை படுமோசமாக உள்ளது. இருப்பினும் தற்போது அவர் மீட்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றார். திரையுலகில் உள்ள நல்ல உள்ளங்கள் அவருக்கு மீண்டும் படத்தில் நடிக்கும் வாய்ப்புகளை கொடுத்து அவருக்கு மறுவாழ்வு கொடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.