close
Choose your channels

கடலோடு கதைப்பேசும் நடிகை காஜல் அகர்வால்… கவனம் ஈர்க்கும் புகைப்படம்!

Monday, February 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் துபாய் சென்றுள்ள நடிகை காஜல் அகர்வால் ரம்மியமான கடற்காற்று, அழகான வெயிலுக்கு நடுவே எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடம் மும்பை தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவரை திருமணம் செய்துகொண்டார். தொடர்ந்து முன்னணி திரைப்படங்களில் நடித்துவந்த அவர் திடீரென்று அதிலிருந்து விலகுவதாகவும் தகவல் வெளியாகியது. காரணம் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் இந்தத் தகவலை அவருடைய கணவர் கௌதம் கிட்சிலு தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார்.

இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் தலைக்காட்டாத நடிகை காஜலின் ஒரு சில புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிர்களிடையே வரவேற்பை பெற்றது. மேலும் சமீபத்த்தில் இவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்து இருந்தது. இதற்காக துபாய் சென்றுள்ள நடிகை காஜல் அங்குள்ள ரிசார்ட் ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அழகான கடற்கரை காற்று, ரம்மியமான வெயிலுக்கு நடுவே நடிகை காஜல் மஞ்சள் உடையில் ஜொலிக்கிறார். கூடவே அவர் கர்ப்பமாக இருப்பதும் இந்தப் புகைப்படத்தில் தெரிகிறது. இந்தப் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலான நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.