close
Choose your channels

காயத்ரியின் சர்ச்சை 'வார்த்தை' குறித்து கமல் கூறியது என்ன?

Thursday, July 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளரும், தலைவியுமான காயத்ரி ரகுராம் நேற்று சர்ச்சைக்குரிய ஜாதியை குறிக்கும் ஒரு வார்த்தையை பயன்படுத்தினார்.

இந்த வார்த்தையை பயன்படுத்திய காயத்ரிக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. வேல்முருகன், வன்னி அரசு போன்ற அரசியல் கட்சி தலைவர்கள் நேற்றைய தொலைக்காட்சிவிவாதம் ஒன்றில் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்றைய பேட்டியில் இதுகுறித்து கமல் கூறியபோது, 'காயத்ரிக்கு நான் திரைக்கதை எழுதிக்கொடுத்திருந்தால், அது என் பொறுப்பு. அதற்கு மன்னிப்பு கேட்கலாம். தவிர, அங்க எப்படி சென்சார் பண்ண முடியும்? நான் வாழும் சொசைட்டில இதைவிட மோசமான வார்த்தைகள் பேசிட்டுதான் இருக்காங்க, அதை உங்களால் தடுக்க முடிகிறதா? என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.