close
Choose your channels

சிறையில் இருந்தால் தான் தலைவரா? திரையில் இருந்தாலும் தலைவர்தான்: கமல்ஹாசன்

Monday, June 13, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிறையில் இருந்தால் தான் தலைவர் என்று இல்லை என்றும் திரையில் இருந்தாலும் தலைவர்தான் என்னும் உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று 300 கோடி வசூலை எட்டியுள்ள நிலையில் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ரத்ததான முகாமை கமல்ஹாசன் தொடங்கி வைத்தார்.

நாளை உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களை ஒருங்கிணைத்து ரத்தம் தேவைப்படுவோருக்கு வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசியபோது, ‘சிறையில் இருந்தால் தான் தலைவர் என்பது இல்லை, திரையில் இருந்தாலும் தலைவர் தான், நான் ஏறவேண்டிய மலை பெரிய மலை, படிப்படியாக ஏறி வருகிறேன். என் வைராக்கியமும் வீரமும் இன்னும் குறையவில்லை’ என்று கூறினார்.

இதனையடுத்து அவர் ’நம்மவர்’ படத்தில் ரத்தம் கொடுப்பது தொடர்பான காட்சிகளை குறிப்பிட்டு ரத்த தானம் செய்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதையும் அவர் விளக்கிக் கூறினார்.

உலகநாயகன் கமல்ஹாசனின் ரசிகர்கள் பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளின் போது ரத்ததானம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.