close
Choose your channels

நான் முயற்சி செய்தேன், மணிரத்னம் வெற்றி பெற்றுவிட்டார்; 'பொன்னியின் செல்வன்' குறித்து கமல்ஹாசன்!

Wednesday, September 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை எடுக்க நான் முயற்சி செய்தேன் என்றும் ஆனால் மணிரத்னம் செய்து காட்டிவிட்டார் என்றும் நேற்று நடைபெற்ற பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

நேற்று நடைபெற்ற ’பொன்னியின் செல்வன்’ இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ’விக்ரம்’ படத்தின் வெற்றிக்காக கமல்ஹாசனுக்கு மேடையிலேயே ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார். மேலும் பொன்னியின் செல்வன் நாவல் தொடர்பாக பல விஷயங்களை இருவரும் தங்கள் உரையில் பகிர்ந்து கொண்டனர். அப்போது கமல்ஹாசன் இந்த விழாவில் பேசியதாவது:

’மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களிடமிருந்து பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக உரிமையை வாங்கி வைத்திருந்தேன். அவர் என்னிடம் பொன்னியின் செல்வன் உரிமையைக் கொடுக்கும் போது சீக்கிரமாக படத்தை எடுத்து விடு என்று கூறினார். அப்போது எனக்கு அது புரியவில்லை.

பிறகு ஒரு சில காரணங்களால் என்னால் இந்த படத்தை எடுக்க முடியவில்லை. என்னிடமிருந்து இந்த கதை நிறைய பேருக்கு சென்றது. அதில் எனக்கு வருத்தம்தான். ஆனால் இத்தனை வருட கனவை செய்தே தீருவேன் என்று வைராக்கியத்துடன் மணிரத்னம் அவர்கள் செய்து காட்டியுள்ளார். அவரை நிச்சயம் பாராட்டி தான் ஆக வேண்டும்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை நானோ அல்லது மணிரத்னமோ கண்டிப்பாக ஒருநாள் தயாரிப்போம் என்று எனக்கு தெரியும். நான் முயற்சி செய்தேன், ஆனால் மணிரத்னம் வெற்றி பெற்றுவிட்டார்’ என்று கமல்ஹாசன் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos