ஆபத்து.. இன்றே கடைசி.. உடனே செயல்படுங்கள்: கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Saturday,December 17 2022]

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு ஆபத்து என்றும் இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இன்று கடைசி தினம் என்பதால் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது; ஒரு நாட்டில் ஜனநாயகம் செழிக்க வேண்டும் என்றால் நாட்டு குடிமக்கள் அனைத்து விஷயத்திலும் பங்கேற்க வேண்டியது அவசியமாகும். இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மீதான கொடூர தாக்குதல் தற்போது நடந்து கொண்டிருக்கும் நிலையில் அதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று நான் நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

இது குறித்த மசோதா மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்க இன்று கடைசி நாள். எனவே அனைத்து மக்களும் இது குறித்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய மசோதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை முடக்கும் விதமாக இருப்பதாகவும் ஜனநாயகத்தின் வெளிப்படைத்தன்மை மீதான நம்பிக்கையை இந்த மசோதா பாதிக்கும் என்றும் புதிய மசோதா நடைமுறைக்கு வந்தால் பொதுமக்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் நிராகரிக்க அரசு தரப்புக்கு அனுமதி கிடைக்கும் என்றும் எந்த ஒரு தனி நபருக்கும் தகவலை வழங்க மறுக்கக் கூடாது என்பதே அடிப்படை உரிமை என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

பல்வேறு உண்மைகள் மற்றும் ஊழலை அறிந்து கொள்ளவும் உலகிற்கு அம்பலப்படுத்தவும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இருக்கிறது என்றும் இதில் உள்ள முக்கிய பிரிவை நீக்கிவிட்டால் பல உண்மைகள் வெளியே வராத நிலை ஏற்படும் என்றும் இது குறித்து கருத்து தெரிவிக்க இன்று கடைசி நாள் என்பதால் இந்த மசோதா மீதான தங்கள் கருத்தை பொதுமக்கள் அனைவரும் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறி உள்ளார்.

More News

விஜய் டிவி பிரபலம் திடீர் கைது: காரணம் பெண் யூடியூபரா?

விஜய் டிவி பிரபலம் திடீரென கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பெண் யூடியூபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகை வரலட்சுமியின் அடுத்த படம்.. டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி முக்கிய வேடத்தில் நடித்து வரும் திரைப்படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 

மீண்டும் ஒரு குறும்படம்.. ஜனனி, அசீம் ஷாக்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே தனலட்சுமி விவகாரம் குறித்து ஒரு குறும்படம் போடப்பட்ட நிலையில் தற்போது இன்று இன்னொரு குறும்படம் ஒளிபரப்பாக உள்ளது என இன்றைய புரமோவில் கமல்ஹாசனின்

'சூர்யா 42' படத்தில் இணைந்த பிரபலம்.. வேற லெவலில் ஸ்டண்ட் காட்சிகள்!

 மலையாள திரையுலகின் முன்னணி சண்டை இயக்குனர் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 42' படத்தில் இணைந்து உள்ளதாகவும் இதனால் இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குஷ்புவின் வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் இரங்கல்!

நடிகை குஷ்புவின் வீட்டில் நிகழ்ந்த சோகத்தை அடுத்து திரையுலகினர் ரசிகர்கள் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.