close
Choose your channels

மீண்டும் ஒரு குறும்படம்.. ஜனனி, அசீம் ஷாக்!

Saturday, December 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே தனலட்சுமி விவகாரம் குறித்து ஒரு குறும்படம் போடப்பட்ட நிலையில் தற்போது இன்று இன்னொரு குறும்படம் ஒளிபரப்பாக உள்ளது என இன்றைய புரமோவில் கமல்ஹாசனின் பேச்சில் இருந்து தெரியவருகிறது.

இந்த வாரம் நடந்த சொர்க்கம் நரகம் டாஸ்க்கில் ஜனனி மற்றும் விக்ரமன் ஆகிய இருவரும் நரகத்திலிருந்து சொர்க்கத்துக்கு வர முயற்சிக்கின்றனர். அப்போது அவர்கள் இருவரையும் தனலட்சுமி தடுக்கும் முயற்சியில் உள்ளார்

இந்த நிலையில் சொர்க்கத்துக்கு வருவதற்கு யார் முதலில் கோட்டை தொட்டார்கள் என்பதில் ஜனனி மற்றும் விக்ரமன் ஆகிய இருவருக்கும் இடையே சர்ச்சை ஏற்படுகிறது. விக்ரமன் நான் தான் முதலில் கோட்டை தொட்டேன் என்று கூற அதை மறுக்கும் ஜனனி நான் தான் முதலில் தொட்டேன் என்று கூறுகிறார்

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தலையிடும் அசீம், ‘ஜனனி தான் முதலில் கோட்டை தொட்டார் என்றும் அதனை நான் பார்த்தேன் என்றும் கூறுகிறார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று கமல்ஹாசன் முன் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது அப்போது கமல்ஹாசன், ‘நான் பார்த்த ஒரு விஷயத்தை இப்போது சொல்லப் போகிறேன். எல்லோரும் ஜனனி தான் முதலில் கோட்டை தொட்டார் என்றும், அசீம் கண்ணால் பார்த்ததாக சொன்னார் என்று கூறி குறும்படம் போடுகிறார். இந்த குறும்படத்தை பார்க்கும்போது, ஜனனி தொட்டாரா? இல்லையா? என்பதை அசீம் பார்க்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார். இந்த குறும்படத்தால் அசீம் மற்றும் ஜனனி ஆகிய இருவரும் ஷாக் ஆகி உள்ளது போல் தெரிகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.