close
Choose your channels

ஒரே தசாப்தத்தில் மாநில எல்லையை கடந்த நண்பரை பாராட்டுகிறேன்: கமல்ஹாசன்

Friday, March 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரசியல் கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் மாநில எல்லையை கடந்து 2வது மாநிலத்தில் வெற்றிபெற்ற எனது நண்பருக்கு பாராட்டுக்கள் என உலக நாயகன் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கியபோது தொடக்க விழாவுக்கு வருகை தந்தவர் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் என்பது தெரிந்ததே. கமல் ஹாசன் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் நெருங்கிய நண்பர்களாக பல ஆண்டுகளாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் டெல்லியில் ஆட்சியிலிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தற்போது பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை பிடித்துள்ளது. அதுமட்டுமின்றி கோவா மாநிலத்திலும் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்று கணக்கை தொடங்கி உள்ளது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் குறிப்பிடவேண்டிய வெற்றியைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் நண்பர் அர்விந்த் கெஜ்ரிவால். கட்சி தொடங்கிய ஒரே தசாப்தத்தில் மாநில எல்லை கடந்து இரண்டாம் மாநிலத்தில் அழுத்தமாகக் காலூன்றியிருக்கும் ஆம் ஆத்மியைப் பாராட்டுகிறேன் என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.