close
Choose your channels

இந்த வயதில் எங்களை எதிர்க்காதீர்கள். உங்களுக்கு நல்லதில்லை...! ம.பி முதல்வரை எச்சரித்த அமித்ஷா.

Monday, January 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மக்கள், அரசியல் கட்சியினர், இளைஞர்கள், மாணவர்கள் எனப் பல தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் அதே குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் பேரணி, பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்தி வருகிறது பா.ஜ.க.

குடியுரிமை விழிப்புணர்வு தொடர்பாக மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் அமித்ஷா கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், என்ன நடந்தாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம். மேலும் மத்திய பிரதேச முதல்வரின் வயதைக் குறித்தும் பேசினார்.

``குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த விடமாட்டோம் எனக் கமல்நாத், உரத்த குரல் எழுப்புகிறார். கமல்நாத் ஜி, நீங்கள் குரல் எழுப்புவதற்கான வயது இது இல்லை. கத்த வேண்டாம், இந்த வயதில் கத்துவது உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. முதலில் மத்தியப் பிரதேசத்தில் நிலவும் பிரச்னைகளை சரி செய்யுங்கள்” என விமர்சித்தார் அமித்ஷா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.