close
Choose your channels

சாலையில் வாகனங்கள் சென்றால் பறிமுதல்: அரசின் அதிரடியால் பரபரப்பு

Wednesday, April 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் மிகத்தீவிரமாக இந்தியாவில் பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு என மத்திய அரசு அறிவித்தது. இதனை அடுத்து கடந்த ஒரு வாரமாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் சிலர் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பலர் காய்கறி மற்றும் மளிகை கடைகளிலும் இருப்பதாகவும் புகைப்படத்துடன் கூடிய செய்திகள் வெளிவந்து அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி மாநிலம் முழுவதும் சாலைகளில் எந்த வாகனங்களும் செல்ல கூடாது என்றும், மீறி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் பொதுமக்கள் நடந்து சென்று தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கி கொள்வதில் எந்தவித தடையும் இல்லை என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது இதனால் பொது மக்களின் நடமாட்டம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தின் இந்த வழிமுறையை தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்றும் பொது மக்களை வீட்டுக்குள் ஏப்ரல் 14ஆம் தேதி வரை முடக்கி வைப்பது ஒன்றே கொரோனா வைரசை ஒழிப்பதற்கான ஒரே தீர்வு என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos