இதுதான் பெஸ்ட் டீம்: கீர்த்திசுரேஷ் பெருமிதம்

  • IndiaGlitz, [Wednesday,November 06 2019]

தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் என்பவர் இயக்கி வந்தார் என்பதும் தெரிந்தது.

தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சம் கொண்ட படம் என்பதும் இந்த படத்திற்கு ’பெண்குயின்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘நான் பணியாற்றிய படக்குழுவினர்களில் இந்த படத்தின் குழுவினர்கள் மிகவும் சிறந்தவர்கள் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே பல இனிமையான அனுபவங்கள் தனக்கு ஏற்பட்டது என்றும், இந்த படத்தை திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில், கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், அனில் கிரிஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நாளை பிறந்தநாள் கொண்டாட்டம்: ரசிகர்களுக்கு கமல்ஹாசன் முக்கிய வேண்டுகோள்

உலக நாயகன் கமல்ஹாசனின் இந்த ஆண்டு பிறந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்த பிறந்த நாள் ஆகும். இந்த ஆண்டுடன் அவர் திரையுலகில் அறிமுகமாகி 60 வருடங்கள் நிறைவு செய்வதால்

'விக்ரம் 58' படத்தின் அடுத்த அப்டேட்டை அளித்த கிரிக்கெட் வீரர்

விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில்,

சிம்புவின் 'மாநாடு'க்கு மீண்டும் பச்சைக்கொடி: ஐயப்பன் அருளா?

சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'மாநாடு' என்ற படம் தொடங்கப்பட்டது.

பரவை முனியம்மா உடல்நிலை குறித்து அப்டேட் தந்த தமிழ் நடிகர்

விக்ரம் நடித்த 'தூள்' படத்தில் இடம்பெற்ற 'சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி...' என்ற பாடல் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான பரவை முனியம்மா

கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த மூன்று பிரபலங்கள் 

உலகநாயகன் கமலஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'மக்கள் நீதி மையம்' என்ற கட்சியை தொடங்கினார் என்பது அனைவரும் அறிந்ததே. அக்கட்சி கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற