close
Choose your channels

நாளை பிறந்தநாள் கொண்டாட்டம்: ரசிகர்களுக்கு கமல்ஹாசன் முக்கிய வேண்டுகோள்

Wednesday, November 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசனின் இந்த ஆண்டு பிறந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்த பிறந்த நாள் ஆகும். இந்த ஆண்டுடன் அவர் திரையுலகில் அறிமுகமாகி 60 வருடங்கள் நிறைவு செய்வதால் அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தோடு, 60ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டமும் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மூன்று நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதும் இதில் நவம்பர் 9ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களான ரஜினிகாந்த், இளையராஜா ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது பிறந்த நாளை கொண்டாடும் ரசிகர்களுக்கும், தனது கட்சியின் ரசிகர்களுக்கும் கமல்ஹாசன் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

நவம்பர் 7ஆம் தேதி எனது பிறந்த நாள்‌ அன்று, பரமக்குடியில்‌ எனது தந்தையார்‌ அய்யா சீனிவாசன்‌ அவர்களின்‌ திருவுருவச்சிலையினைத்‌ திறக்கவுள்ளோம்‌ என்பதை தாங்கள்‌ அனைவரும்‌ அறிவீர்கள்‌. அப்பொழுது என்னை வரவேற்க வருகின்ற நண்பர்கள்‌, தொண்டர்கள்‌ மற்றும்‌ ரசிகப்பெருமக்கள்‌ எவ்விதத்திலும்‌ பொதுமக்களுக்கு. ஊறு விளைவிக்கக்கூடிய வகையில்‌ பேனர்கள்‌, ஃப்ளெக்ஸ்‌ மற்றும்‌ கொடிகள்‌ போன்றவற்றை கட்டாயம்‌ தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்‌.

இவ்விசயத்தில்‌ எவ்வித காரணங்களும்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, எந்நிலையிலும்‌ சமரசங்கள்‌ செய்து கொள்ளப்பட மாட்டாது என்பதை மிகவும்‌ கண்டிப்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்‌. இனி நிகழவிருக்கும்‌ அரசியல்‌ மற்றும்‌ ஆட்சி முறைகளில்‌, மக்கள்‌ நீதி மய்யம்‌ கட்சி கொண்டு வரவிருக்கும்‌ மாற்றங்களை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும்‌ என்பது எனது விருப்பம்‌.

இவ்வாறு கமல்ஹாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.