close
Choose your channels

சிம்புவின் 'மாநாடு'க்கு மீண்டும் பச்சைக்கொடி: ஐயப்பன் அருளா?

Wednesday, November 6, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ’மாநாடு’ என்ற படம் தொடங்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் முடிவடைந்து மலேசியாவில் படப்பிடிப்பு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு சிம்பு சரியாக ஒத்துழைக்கவில்லை என்பதால் சிம்பு இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அவருக்கு பதிலாக வேறு ஒரு பிரபல நடிகர் இந்த படத்தில் நடிப்பார் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திடீரென அறிவித்தார். இதனை அடுத்து சிம்பு தரப்பில் இருந்து’மகாமாநாடு’என்ற படத்தை தயாரித்து நடித்து இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ஐயப்பன் கோவிலுக்கு சிம்பு மாலை அணிவித்து உள்ளார். அவர் இன்னும் ஒரு சில நாட்களில் ஐயப்பன் கோவிலுக்கு சென்று திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ஐயப்பனின் அருளால் ’மாநாடு’ படக்குழுவினர்களிடையே ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கி, மீண்டும் படக்குழுவினர் மாநாடுக்கு பச்சைக்கொடி காட்டி உள்ளனர்.

இதனை அடுத்து விரைவில் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்வார் என்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறி உள்ளதால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே இந்த படம் குறித்த பிரச்சனைகள் பேசித் தீர்க்கப்பட்டு இருப்பதாகவும், சிம்பு இனிமேல் முழு ஒத்துழைப்பு தருவார் என்று அவரது தாயார் உறுதி மொழி கொடுத்ததாகவும் கூறப்பட்டதை அடுத்து தற்போது மீண்டும் ’மாநாடு’உயிர்த்தெழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.