close
Choose your channels

'பாபநாசம்' படம் பார்த்து மனைவியை கொலை செய்தேன்: ஒரு அதிர்ச்சி வாக்குமூலம்

Tuesday, December 10, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கேரளாவைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் தனது மாணவி வித்யாவை கொலை செய்துவிட்டு பாபநாசம் பட பாணியில் தப்பிக்க முயற்சித்த நிலையில் போலீசார் அவரை கைது செய்து உள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த பிரேம்குமார் தனது மனைவி வித்யாவுடன் ஒரு பங்களாவில் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பிரேம்குமாருக்கு சுனிதா என்ற கள்ளக் காதலி இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து ஒரு நாள் பிரேம்குமார் மற்றும் சுனிதா ஆகிய இருவரும் சேர்ந்து வித்யாவை கொலை செய்துவிட்டு பிணத்தை ஆளரவமற்ற பகுதியில் தூக்கி எறிந்து விட்டனர். அதன்பின் வித்யாவின் மொபைல் போனை பீகாருக்கு செல்லும் ஒரு ரயிலில் பிரேம்குமார் தூக்கி எறிந்துவிட்டு பின்னர் தனது மனைவியை காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்த போது வித்யாவின் மொபைல் போன் பீகாரில் இருப்பதாக காண்பிப்பதது. மேலும் விசாரணையின்போது பிரேம்குமாருக்கும் வித்யாவுக்கும் அடிக்கடி மனகசப்பு ஏற்பட்டு இருப்பதும் சுனிதா என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து பிரேம்குமார் மட்டும் சுனிதாவை காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் தங்கல் பாணியில் விசாரித்த போது இருவரும் சேர்ந்து வித்யாவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டனர். போலீசாரின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக வித்யாவின் மொபைல் போனை பீகார் செல்லும் ரயிலில் தூக்கி எறிந்ததாகவும், பாபநாசம் படத்தை பார்த்த இதை செய்ததாகவும் பிரேம் குமார் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்

இதனையடுத்து பிரேம்குமார் மற்றும் சுனிதாவை கைது செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர். பாபநாசம் படத்தைப் பார்த்து அதே பாணியில் மனைவியை கொலை செய்த பிரேம்குமார் போலீசாரிடம் பிடிபட்டு தற்போது சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.