close
Choose your channels

மது குடித்துவிட்டுத்தான் கதையே எழுதுவேன்… சீக்ரெட்டை ஓபன் செய்த பிரபல இயக்குநர்!

Monday, April 18, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கன்னட சினிமா இயக்குநராக அறிமுகமாகி தற்போது கேஜிஎஃப் திரைப்படம் மூலம் பான் இந்தியா இயக்குநராக உலகம் முழுக்க பிரபலம் அடைந்திருக்கும் இயக்குநர் பிரசாந்த் நீல் தன்னுடைய குடிப்பழக்கம் பற்றி வெளிப்படையாகக் கூறிய கருத்துகள் சமூகவலைத் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் யாஷ் நடிப்பில் “கேஜிஎஃப்1“ திரைப்படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் கடந்த 2018 ஆம் ஆண்டு உருவாக்கியிருந்தார். இந்தத் திரைப்படம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்தது. இதையடுத்து “கேஜிஎஃப் 2 “ திரைப்படம் உருவாக்கப்பட்டு இந்த மாதம் 14 ஆம் தேதி ரிலீசானது. இந்தப் படத்தை உலகம் முழுக்கவே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வசூல் ரீதியிலும் படம் வெற்றியடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கேஜிஎஃப் திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டபோது, கதைகளை எழுத நான் அடிக்கடி மது அருந்துவேன். மறுநாள் காலையில் நிதானமாக இருக்கும்போது அதனைப் படித்து பார்ப்பேன். அது சிறப்பாக இருந்தால் திரைக்கதையாக எழுதுவேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஏற்கனவே படைப்பை உருவாக்கும் எழுத்தாளர்களுக்கு பெரும்பாலும் குடிப்பழக்கம் இருக்கும் என்ற கருத்துக் கணிப்பு இருந்துவருகிறது.

இப்படியிருக்கும்போது இயக்குநர் பிரசாந்த் நீல் தனக்குக் குடிப்பழக்கம் இருக்கிறது என வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இந்தக் கருத்து சமூகவலைத் தளங்களில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.