close
Choose your channels

ராயபுரம், திருவிக நகரை முந்தியது கோடம்பாக்கம்: மண்டலவாரியாக கொரோனா பாதிப்பு

Friday, May 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் நேற்று வரை 5409 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதில் சென்னையில் மட்டும் 2644 பேர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சென்னையில் ராயபுரத்தில் தான் அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். ஆனால் கடந்த நான்கு நாட்களாக ராயபுரத்தை முந்திக்கொண்டு திருவிக நகரில் அதிக பாதிப்பு இருந்தது.

இந்த நிலையில் நேற்று நிலைமை தலைகீழாகி ராயபுரம், திருவிக நகரை பின்னுக்கு தள்ளிவிட்டு கோடம்பாக்கம் முதலிடத்தை பிடித்துள்ளது. கோடம்பாக்கம் பகுதியில் மட்டும் 461 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து திருவிக நகரில் 448 பேர்களும் ராயபுரத்தில் 422 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேனாம்பேட்டையில் 316 பேர்களும் அண்ணாநகரில் 206 பேர்களும் தண்டையார்பேட்டையில் 184 பேர்களும், அடையாறு பகுதியில் 107 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மிக குறைவாக மணலியில் 14 பேர்களும், சோழிங்கநல்லூரில் 15 பேர்களும், ஆலந்தூரில் 16 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos