close
Choose your channels

சாந்தனு என் ரசிகர் இல்லை. விஜய் கூறியது ஏன்?

Thursday, December 29, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் நடித்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம் வரும் பொங்கல் திருநாளில் வெளிவர உள்ள நிலையில் பேட்டி ஒன்றில் விஜய்யுடன் ஏற்பட்ட சந்திப்பு குறித்து சாந்தனு கூறியுள்ளார்.

திருமணத்திற்கு பின்னர் முதல்முறையாக தான் மனைவியுடன் விருந்துக்கு சென்று விஜய் வீட்டிற்குத்தான் என்று கூறிய சாந்தனு, விருந்துக்கு பின்னர் தான் விஜய் மற்றும் சங்கீதாவுடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் அப்போது சங்கீதா தன்னை பார்த்து நீங்கள் எப்பொழுதில் இருந்து விஜய்யின் ரசிகர் என்று கேட்டதாகவும் கூறினார்

அப்போது சங்கீதாவை விஜய் இடைமறித்து 'சாந்தனு என்னுடைய ரசிகர் இல்லை, அவர் எனக்கு சகோதரர் போன்றவர்' என்று கூறியதாக சாந்தனு தெரிவித்தார். விஜய்க்கு எப்போதுமே தன்னுடைய தீவிர ரசிகர் என்று கூறுபவர்களை விட தனக்கு சகோதரர் போன்றவர் என்று கூறுவதையே விரும்புவார் என்றும் சாந்தனு கூறினார்.

மேலும் விஜய் ஆரம்பகாலத்தில் சந்தித்த சோதனைகளையே தானும் சந்தித்து வருவதாகவும், எஸ்.ஏ.சி. மகன் என்ற பிராண்டை உடைத்து தனக்கென ஒரு அடையாளம் தேட விஜய் முயற்சித்து வெற்றி பெற்றது போல தானும் தன்னுடைய தந்தையின் பிராண்டை உடைத்து வெளிவர முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் சாந்தனு கூறினார்.

>

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.