close
Choose your channels

எனது அடுத்த படத்தில் 'பயணம்' முக்கிய பங்கு வகிக்கும்: கிருத்திகா உதயநிதி

Monday, June 7, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’வணக்கம் சென்னை’ மற்றும் ’காளி’ ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் கிருத்திகா உதயநிதி சமீபத்தில் தனது மூன்றாவது படம் குறித்த அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் என்பதை பார்த்தோம். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராமன் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி தான்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த படத்தில் ரிச்சர்ட் எம் நாதன் அவர்கள் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கிருத்திகா உதயநிதி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது மூன்றாவது படம் குறித்த ஒரு சில தகவல்களை கிருத்திகா உதயநிதி தெரிவித்துள்ளார். ஒரு நல்ல கதைக்காக கடந்த சில ஆண்டுகளாக தான் காத்திருந்ததாகவும் இந்த படத்தின் கதை ஒரு வாழ்வின் பயணத்தை பற்றிய கதை என்றும் பயணம் இந்த படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படம் ஒரு டிராவல் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.