close
Choose your channels

உலகில் மிகச்சிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிதான் – இப்படி சொன்னவர் நம்ம ரொனால்டோ!!!

Wednesday, June 3, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகில் மிகச்சிறந்த கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிதான் – இப்படி சொன்னவர் நம்ம ரொனால்டோ!!!

 

கால்பந்து போட்டிகளில் ஜாம்பவனாகத் திகழும் பிரேசில் வீரர் ரொனால்டோ, லியோனல் மெஸ்ஸி யை உலகில் மிகச்சிறந்த கால்பந்து வீரர் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் தனக்கு பிடித்த முதல் ஐந்து கால்பந்து வீரர்களின் பட்டியலையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். அந்த வரிசையில் முதலாவது இடத்தை லியோனல் மெஸ்ஸி பிடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. “மெஸ்ஸி நிச்சயமாக அவர் முதலிடத்தில் இருக்கிறார். அவர் ஒரு திறமை வாய்ந்த வீரர். இதுபோன்ற ஒரு திறமையான வீரரை 20 அல்லது 30 வருடங்களுக்கு ஒருமுறைதான் பார்க்க முடியும்” எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

ரொனால்டோ வுக்கு பிடித்த வீரர்களின் அடுத்தடுத்த பட்டியலில் லிவர்பூல் நட்சத்திரமான மொஹமட் சலா இரண்டாவது இடத்திலும், ரியல் மாட்ரிட்டன் வீரர் ஈடன் ஹஸார்ட் மூன்றாவது இடத்தையும் பிடித்து இருக்கின்றனர். அடுத்து பாரிஸ் செயிண்ட் இரட்டையர்களான நெய்மர் மற்றும் ம்பாப்பே வும் இடம் பெற்றிருக்கின்றனர். தனது பட்டியலைக் குறித்து கருத்து தெரிவித்த ரொனால்டோ நாங்கள் அனைவரும் ஒத்தப் பண்புகளை கொண்டவர்கள். ஒருவரோடு ஒருவரை ஒப்பிடுவதையும் நான் விரும்ப மாட்டேன். மொஹமட் சலா விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ஈடன் ஹஸார்ட் ஐயும் நான் ரசித்திருக்கிறேன்.

மேலும், ம்பாப்பே என்னைப் போலவே இருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். அவர் மிகவும் வேகமாக இருக்கிறார். அவர் நன்றாக விளையாடுகிறார். இரு கால்களையும் பயன்படுத்தி அவரால் அருமையாக கோல் அடிக்க முடிகிறது. அவரிடம் நல்ல முன்னேற்றத்தையும் பார்க்க முடிகிறது எனவும் கூறியிருக்கிறார். ஆனால் ரொனால்டோ வெளியிட்ட பட்டியலில் பிரபல வீரரான கிறிஸ்டியானோ பெயர் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.