close
Choose your channels

விஜய்மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு: லண்டன் கோர்டி அதிரடி தீர்ப்பு

Monday, December 10, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய வங்கிகளில் ரூ.9ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை மீண்டும் இந்தியா கொண்டு வர இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்தது.

அந்த வகையில் விஜய்மல்லையாவை இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று லண்டன் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் சற்றுமுன் இந்த வழக்கின் தீர்ப்பை லண்டன் கோர்ட் வெளியிட்டது.

இந்த தீர்ப்பின்படி விஜய்மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அவரை இந்தியா கொண்டு வர இந்திய அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் விஜய்மல்லையா இந்தியா அழைத்து வரப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த உத்தரவை எதிர்த்து விஜய்மல்லையா மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.