close
Choose your channels

நா.முத்துகுமார் மகனுக்கு மரியாதை செலுத்திய 'தேவி' படக்குழுவினர்

Tuesday, November 8, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகிய டாக்டர் கணேஷ் ஏற்பாடு செய்த இந்த விழாவில் படக்குழுவினர் அனைவருக்கும் நினைவுக்கோப்பை வழங்கப்பட்டது.
இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதிய பாடலாசிரியர் நா.முத்துகுமார் சமீபத்தில் திடீரென மரணம் அடைந்துவிட்டதால் முத்துகுமாரின் மகனுக்கு நினைவுக்கோப்பை அளிக்கப்பட்டது. முத்துகுமாரின் மகன் நினைவுக்கோப்பையை பெறும்போது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், நடிகர்கள் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, ஜீவா உள்பட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.