சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? இயக்குனர் விளக்கம்!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதாக சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து இந்த படத்தின் இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ படம் தீபாவளி விருந்தாக வெளியான நிலையில் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் தனது அடுத்த படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக ‘மாவீரன்’ படத்தின் ஸ்கிரிப்ட்டில் சிவகார்த்திகேயன் தலையிடுவதாகவும் இதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது.

இந்த நிலையில் இதுகுறித்து இயக்குநர் மடோன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது, ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டதாக எப்படி வதந்தி பரவியது என்று எனக்கு தெரியவில்லை. கனமழை காரணமாக வெளிப்புற படப்பிடிப்பு மட்டுமே நிறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது மழை குறைந்து உள்ளதை அடுத்து மீண்டும் படப்பிடிப்பை தொடங்கி உள்ளோம். தற்போது கூட நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் தான் இருக்கிறோம்.

‘மாவீரன்’ திரைப்படம் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் துளியும் உண்மையில்லை’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதிஷங்கர் நடிக்கும் இந்த படத்தின் வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யனார் ஒளிப்பதிவில் ஃபிலோமின்ராஜ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

விக்ரமனை பிராங்க் செய்த குயின்ஸி.. என்ன நடக்குது  இங்கே?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு மாதமாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் போடும் செல்ல சண்டைகள் மற்றும் பிராங்க் காட்சிகள்

மருத்துவ சிகிச்சையில் த்ரிஷா, சமந்தா, பூஜா ஹெக்டே.. என்ன ஆச்சு ஹீரோயின்களுக்கு?

த்ரிஷா, சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய நடிகைகள் தற்போது மருத்துவ சிகிச்சையில்  இருப்பது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஷங்கரின் 'வேள்பாரி' படத்தில் இந்த பிரபல நடிகரா? அப்ப சூர்யா என்ன ஆச்சு?

'வேள்பாரி' என்ற நாவலை திரைப்படமாக  பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் இந்த படம் மூன்று பாகங்களாக உருவாக இருப்பதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியானது.

அனுஷ்காவின் 41வது பிறந்த நாளில் 48வது பட அறிவிப்பு: போஸ்டர் ரிலீஸ்!

தமிழ், தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களுடன் நடித்த பிரபல நடிகை அனுஷ்கா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது 48வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது 

'மைனா' சூசனுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்!

பிரபு சாலமன் இயக்கிய மைனா என்ற திரைப்படத்தின் மூலம் அமலா, தம்பி ராமையா உள்பட ஒருசில நட்சத்திரங்கள் பிரபலமானார்கள் என்று தெரிந்ததே. அதேபோல் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை