close
Choose your channels

சும்மா உட்கார்ந்து கொண்டே லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியுமா? ஒரு ஆச்சரிய வீடியோ!

Saturday, August 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கஷ்டப்பட்டு இரவு பகலாக உழைத்தால் கூட ஆயிரக்கணக்கில் தான் வருமானம் வரும் என்ற நிலையில் இரண்டு மணி நேரம் சும்மா உட்கார்ந்திருந்த ஒருவர் லட்சக் கணக்கில் சம்பாதித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்தோனேசியாவைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் ஒருவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் பெயர் ’இரண்டு மணி நேரம் சும்மா உட்கார்ந்து இருத்தல்’ (2 HOURS of doing nothing). அவருடைய ஃபாலோயர்கள் பலர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்

இந்த வீடியோவில் அவர் கேமரா முன்பு 2 மணி நேரம் 20 நிமிடங்கள் சும்மாவே உட்காந்து இருக்கின்றார். இந்த இரண்டு மணி நேரமும் அவர் வேறு ஒன்றுமே செய்யாமல் கேமரா முன்பு உட்கார்ந்திருப்பதை மட்டுமே செய்துள்ளார். இந்த வீடியோவை இரண்டே மணிநேரத்தில் 1.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். பலர் இந்த வீடியோவுக்கு சுவராசியமான கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் சும்மா உட்கார்ந்திருப்பதை இரண்டு மணி நேரம் முழுதாக பார்த்தவர்களும் பலர் உள்ளனர் என்பது தான் ஆச்சரியமான தகவல். ஏனெனில் அந்த நபர் 362 முறை இந்த இரண்டு மணி நேரத்தில் கண் சிமிட்டி உள்ளார் என்று ஒருவர் கமெண்டில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த வீடியோவை இதுவரை மில்லியன் கணக்கானோர் பார்த்து உள்ளதால் இந்த இளைஞருக்கு லட்சக்கணக்கில் யூட்யூப்பில் இருந்து வருமானம் வந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சும்மா உட்கார்ந்து கொண்டே இருப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்று வடிவேலு ஒரு திரைப்படத்தில் கூறியுள்ளதை இந்த இளைஞர் நிரூபித்துள்ளதாக தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.