close
Choose your channels

மக்களால் தேர்வான நடிகைக்கு பெயர் சூட்டிய பாரதிராஜா.. ராதிகா, ரேவதி வரிசையில் இன்னொரு 'ஆர்' நடிகை..!

Wednesday, May 17, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் முதல் திரைப்படமான ’மார்கழி திங்கள்’ என்ற படத்தின் நாயகியை மக்களே தேர்வு செய்ய ஒரு வாய்ப்பளிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

சினிமா பின்னணி இல்லாத திறமையான ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால் இந்த படத்தில் நடிக்க விரும்பும் பெண்கள் தங்களது வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் அந்த வீடியோவில் இருந்து தேர்வு செய்யப்படும் பெண்தான் இந்த படத்தின் நாயகி என்றும் இந்த படத்தை தயாரிக்கும் இயக்குனர் சுசீந்திரன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட நடிகை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நடிகைக்கு சினிமாவுக்காக ரக்ஷனா என்று பாரதிராஜா பெயர் சூட்டி உள்ளார். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா வரிசையில் இந்த ரக்ஷனாவும் தமிழ் திரையுலகில் புகழ் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் நாயகனாக சியாம் செல்வன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.