close
Choose your channels

மன்சூர் அலிகானின் முன்ஜாமின் மனு தள்ளுபடி: கைது செய்யப்படுவாரா?

Wednesday, April 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விவேக் மறைந்தபோது பேட்டியளித்த பிரபல நடிகர் மன்சூர் அலிகான் கொரோனா தடுப்பூசி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதனை அடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் மன்சூர் அலிகான் மீது சென்னை காவல்துறை ஆணையத்தில் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்

அதன்படி சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரின் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என்று முன்ஜாமீன் கேட்டு நடிகர் மன்சூரலிகான் சென்னை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த முன்ஜாமின் மனு சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து அவர் கைது செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று தான் கூறவில்லை என்று மன்சூர் அலிகான் விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.