close
Choose your channels

த்ரிஷா உள்பட 3 பிரபலங்கள் மீது மானநஷ்ட வழக்கு.. அதில் ஒருவர் சூப்பர் ஸ்டார்.. மன்சூர் அலிகான் அறிவிப்பு..!

Sunday, November 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

த்ரிஷா உள்பட 3 பேர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ள நிலையில் அதில் ஒருவர் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மன்சூர் அலிகான் அதற்கு விளக்கம் அளித்திருந்தார். ஆனாலும் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டது என்பதும் திரை உலகை சேர்ந்தவர்கள் பலர் மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மன்சூர் அலிகான் த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்பட்டது.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் திடீரென த்ரிஷா உள்பட மூவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாக அறிவித்துள்ளார். த்ரிஷா, குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி மீது மான நஷ்ட வழக்கு தொடர போவதாகவும் மூவர் மீது கிரிமினல், பொது அமைதியை கெடுத்தது உள்ளிட்ட பிரிவுகளில் நாளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர் போவதாக தெரிவித்துள்ளார்,.

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்கி வரும் சிரஞ்சீவி உள்பட மூவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக மனசூர் அலிகான் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos