பாரீஸ் திரையரங்கில் 'மெர்சல்' திரைப்படத்தின் திடீர் மாற்றம்

  • IndiaGlitz, [Friday,October 13 2017]

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் சுமார் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்கள் டபுள் தீபாவளி கொண்டாட தயாராகி உள்ளனர்.

இந்த நிலையில் இந்த படம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் திரையரங்கில் திரையிடவுள்ளதாகவும், கபாலி, பாகுபலி 2 படத்திற்கு பின்னர் திரையிடப்படும் தென்னிந்திய திரைப்படம் 'மெர்சல்' என்பதும் ஏற்கனவே நாம் பார்த்ததே

இந்த நிலையில் 'மெர்சல்' திரைப்படத்தின் டிக்கெட் மிக வேகமாக இந்த திரையரங்கில் புக் ஆகியதை தொடர்ந்து தற்போது இந்த படம் பெரிய ஸ்க்ரீனுக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து கிராண்ட்பிரிக்ஸ் திரையரங்கின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, 'மெர்சல் படத்திற்கு அதிக டிக்கெட்டுக்கள் புக் ஆகியுள்ளதை தொடர்ந்து பெரிய திரைக்கு மாற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 17ஆம் தேதி பாரீஸ் நேரப்படி இரவு 11.55க்கு 'மெர்சல் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் பாரீஸ் நகரில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

More News

Mr.சந்திரமெளலி படத்தில் இணைந்த இன்னொரு ஹீரோ

நவரச நாயகன் கார்த்திக் மற்றும் அவரது மகன் கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணையும் Mr.சந்திரமெளலி திரைப்படத்தில் ரெஜினா மற்றும் வரலட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கவுள்ளனர்

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி சுமார் ரூ.2000 கோடி வசூலை நெருங்கியது.

ரசிகர்களை குளிர்விக்க தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி திட்டம்

ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை வரி ஆகியவை திரையுலகினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளதால் இந்த சுமையை படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் தலையில் தான் சுமத்த வேண்டிய கட்டாயத்தில் திரையுலகினர் உள்ளனர்.

மெர்சல் காளையுடன் இணையும் துள்ளி வரும் மான்

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் அனைத்து தடைகளையும் தகர்த்து வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவருவது உறுதி என்றும், தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார்

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து மீண்டும் இணையும் ஓவியா-சினேகன்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருசிலருக்கு மிகப்பெரிய புகழும், ஒருசிலருக்கு கடுமையான விமர்சனங்களும் கிடைத்தது.