close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்

Friday, October 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி சுமார் ரூ.2000 கோடி வசூலை நெருங்கியது. இதனையடுத்து அவர் இயக்கவுள்ள அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் அவர் இயக்கவுள்ள இரண்டு படங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

வரும் 2018ஆம் ஆண்டு டிவிவி தனய்யா தயாரிப்பில் ஒரு சமூக பிரச்சனையை அலசும் படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் 2019ஆம் ஆண்டு மகேஷ்பாபு நடிப்பில் கே.எல்.நாராயணா தயாரிக்கும் படம் ஒன்றையும் இயக்க எஸ்.எஸ்.ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இரண்டு படங்களும் குறுகிய கால படங்களாகவும், அதிக கிராபிக் காட்சிகள் இல்லாத படங்களாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.