close
Choose your channels

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து மீண்டும் இணையும் ஓவியா-சினேகன்

Friday, October 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருசிலருக்கு மிகப்பெரிய புகழும், ஒருசிலருக்கு கடுமையான விமர்சனங்களும் கிடைத்தது. கடைசி வரை சினேகன், ஆரவ் இடையே கடைசி வரை கடுமையான போட்டி இருந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டார்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டத்தை பெறவில்லை என்றாலும் மக்களின் சாம்பியன் என்ற பட்டத்தை பெற்றவர்கள் ஓவியா மற்றும் சினேகன் என்பது தெரிந்ததே. இவர்கள் இருவரில் ஒருவர் வெற்றி பெற வேண்டும் என்று லட்சக்கணக்கானோர் விரும்பினர்

இந்த நிலையில் சினேகன் மற்றும் ஓவியா தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். ஆம், இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தை பிரபல இசையமைப்பாளர் சி.சத்யா தயாரிக்கவுள்ளார். இந்த படம் குறித்த பிற விபரங்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.