close
Choose your channels

 தேர்வு முடிவுகளில் குளறுபடி...! மாலை முக்கிய அறிவிப்பை  வெளியிடும் முதல்வர் ..!

Monday, May 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இணையவழியில் நடத்தப்படும் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பதாக கல்லூரி மாணவர்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், இன்று மாலையளவில் தமிழக முதல்வர் இதுகுறித்து அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்.

கல்லூரி மாணவர்களுக்கான இணையவழி தேர்வு மற்றும் அரியர் தேர்வு உள்ளிட்டவற்றில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடப்பதாக 100-க்கும் அதிகமான மாணவர்கள் அரசிடம்'புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் தலைமையில் இன்று நடைபெறுகின்ற கூட்டத்தில் முக.ஸ்டாலின் முடிவெடுப்பார் என உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு 2020-இல் கொரோனா பரவ துவங்கிய காலத்திலிருந்தே, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள், தேர்வுகள், தேர்வு முடிவுகள் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் இணையவழி தேர்வு முடிவுகளில் ஏராளமான பிரச்சனைகள் வருவதாக தொடர்ந்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழகத்தில் முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி கூறியதாவது,

இணையவழி தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் மற்றும் பிரச்சனைகள் இருப்பதாக மாணவர்களுடன் இருந்து அரசிற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதைத்தொடர்ந்து பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். இது குறித்து முக்கிய கூட்டம் இன்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. அதில் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார் என பொன்முடி கூறினார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.