உலக அழகி போட்டியில் மகுடத்தை நூலிழையில் மிஸ் செய்த இந்திய அழகி!


Send us your feedback to audioarticles@vaarta.com


2021 ஆம் ஆண்டில் உலக அழகிப் போட்டியின் முடிவு சற்று முன் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் போலந்து நாட்டு அழகி உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய 2021 ஆம் ஆண்டின் உலக அழகி போட்டியில் தற்போது நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளின் அழகிகள் கலந்து கொண்ட நிலையில் போலந்து நாட்டின் அழகி கரோலினா பைலாவ்ஸ்கா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு உலகெங்கும் உள்ள பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த அழகி மானசா என்பவர் 13வது இடத்தை பெற்றார் என்றாலும் அமெரிக்கா சார்பில் பங்கேற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அழகி ஸ்ரீசைனி என்பவர் தான் முதல் ரன்னர் அப் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நூலிழையில் மகுடத்தை மிஸ் செய்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments