மாயமான சித்தார்த்தா உடல் நேத்ராவதி நதியில் கண்டெடுப்பு:

  • IndiaGlitz, [Wednesday,July 31 2019]

பிரபல தொழிலதிபரும் காஃபி டே' நிறுவனத்தின் நிறுவனருமான சித்தார்த்தா நேற்று முன் தினத்தில் இருந்து காணாமல் போன நிலையில் இன்று காலை அவரது உடல் நேத்ராவதி நதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சுமார் 1500க்கும் மேற்பட்ட காஃபி டே' கிளைகளை நிறுவி கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமான தொழிலதிபராக வலம் வந்தவர் சித்தார்த்தா. முன்னாள் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான இவரது நிறுவனங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் சித்தார்த்தா தனது வருமானத்திற்கு உரிய வரியை கட்டவில்லை என்று அவருடைய நிறுவனங்களில் ஒன்றான மைண்ட் டிரி நிறுவனத்தின் 75 லட்சம் பங்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதனால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான சித்தார்த்தா, நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் மனமுடைந்தார்.

இதனையடுத்து உருக்கமான கடிதம் ஒன்றை தனது குடும்பத்திற்கும், தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கும் எழுதிய சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றின் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவரது கார் டிரைவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சித்தார்த்தா உடலை கடந்த 36 மணி நேரமாக மீட்புக்குழுவினர் தேடி வந்த நிலையில் இன்று காலை அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ஒரு தொழிலதிபரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

More News

அஜித்தை அடுத்து விஜய் பட ரீமேக்கில் அக்சயகுமார்

அஜித் நடித்த 'வீரம்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் அக்சயகுமார் நடித்த உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

விஜய்சேதுபதி பட ரிலீசுக்கு முட்டுக்கட்டை போட்ட சமந்தா?

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, சமந்தா, பகத் பாசில் உள்பட பல பிரபலங்கள் நடித்த படம் 'சூப்பர் டீலக்ஸ்'. இந்த படம் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

பிரபல நடிகைக்கு தபாலில் 'தலாக்' அனுப்பிய கணவர்

இந்திய பாராளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு சற்றுமுன் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில்

'இந்தியன் 2' திரைப்படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் முதல் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

விஜய்சேதுபதியை முந்தும் சசிகுமார்!

விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாகவிருப்பதாகவும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கவுள்ளதாகவும் ஏற்கனவே ஒரு செய்தி வெளியானது.