close
Choose your channels

'பஞ்சமி' நில விவகாரம்: டாக்டர் ராமதாசுக்கு முக ஸ்டாலின் சவால்!

Friday, October 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில், ‘அசுரன் - படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றிமாறனுக்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷூக்கும் பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்! என்று கூறியிருந்தார்.

டாக்டர் ராமதாஸின் குற்றச்சாட்டுக்கு தற்போது முக ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை! நான் சொல்வது பொய்; அது பஞ்சமி நிலம் என்று மருத்துவர் அய்யா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயார்! அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும், அவர் மகனும் அரசியலை விட்டு விலகத் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தை தருவாரா? அல்லது அரசியலை விட்டு விலகுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos