close
Choose your channels

அன்னை சோனியா காந்தி பிரதமரா! நீங்களுமா ஸ்டாலின்?

Friday, March 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்கள் பலர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒருசிலர் வாய்தவறி தவறான தகவல்களை அளித்து வருவதும், அவ்வாறு தலைவர்கள் பேசும் பேச்சை நெட்டிசன்கள் கலாய்த்து வருவதும் தெரிந்ததே.

இன்று காலை கூட 'புல்வாமா தாக்குதலை நடத்தியது பிரதமர் மோடி என்று வாய் தவறி கூறிய பிரேமலதாவையும், எடப்பாடி தலைமையிலான திமுக ஆட்சி என்று துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியதையும் நெட்டிசன்கள் தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் '02.07.2005 அன்று அன்னை சோனியா காந்தி பிரதமராக இருந்தபோது' என்று பேசியுள்ளார். சோனியா காந்தி எப்போது பிரதமராக இருந்தார்? என்றும் 'நீங்களுமா ஸ்டாலின்' என்றும் நெட்டிசன்கள் கிண்டலுடன் கேட்டு வருகின்றனர். இவ்வளவிற்கு இதனை முக ஸ்டாலின் தனது கையில் உள்ள குறிப்புகளை பார்த்தே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos