close
Choose your channels

புடினை “சைக்கோ“ என விமர்சித்த மாடல் அழகி.. சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட சோகம்!

Thursday, March 17, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஷ்யாவில் பிரபல மாடல் அழகியாக வலம்வந்த ஒரு பெண் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடினை “சைக்கோ, மனநலம் பாதிக்கப்பட்டவர்“ என்று தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கடுமையாக விமர்சித்து இருந்தார். அவர் தற்போது சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளதால் கடும் பரபரப்பு ஏற்படுள்ளது.

23 வயதான மாடல் அழகி கிரெட்டா வெட்லர் கடந்த ஆண்டு புடினை விமர்சித்து தனது சோஷியல் மீடியா பக்கத்தில் கருத்து வெளியிட்டு இருந்தார். இந்தப் பதிவிற்கு ஏராளமான பாராட்டுகள் குவிந்துவந்த நிலையில் அவர் திடீரென்று தனது சோஷியல் மீடியா பக்கத்தில் எந்தப் பதிவையும் போடாமல் இருந்துவந்துள்ளார். இதனால் புடின் அரசு அவரை கைது செய்திருக்கும் எனத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

ஆனால் கிரெட்டா வெட்லர் சமீபத்தில் சாலையில் கிடந்த ஒரு சூட்கேசில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால் அவரைக் கொலை செய்தது யார்? புடினால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பாரா? என்று பலரும் விமர்சித்த வந்த நிலையில் கிரெட்டாவின் காதலர் டிமிட்ரி கொரோ அவராகவே சரணடைந்துள்ளார். கிரெட்டாவிற்கும் தனக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக அவரை நான் கொலை செய்துவிட்டேன். மேலும் சடலத்துடன் 3 நாட்கள் சுற்றியழைந்தேன் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே உக்ரைன் விவகாரம் தொடர்பாக உலக நாடுகள் முழுக்க புடின் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் கிரெட்டா வெட்லரின் கொலை வழக்கு குறித்த தகவல்கள் வெளியாகி பலரும் புடினை விமர்சித்து வருகின்றனர். ஆனால் அந்த கொலை வழக்கில் கிரெட்டாவின் காதலர் டிமிட்ரி கொரோ கைது செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.