close
Choose your channels

ஹோலி கொண்டாடிவிட்டு பாத்ரூமில் ஒன்றாக குளித்த தம்பதிகள் மர்ம மரணம்.. என்ன நடந்தது?

Thursday, March 9, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹோலி கொண்டாடிவிட்டு தங்கள் மீது உள்ள கலர் பொடிகளை நீக்குவதற்காக குளித்து கொண்டிருந்த தம்பதிகள் மர்மமான முறையில் மரணம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

மும்பையைச் சேர்ந்த தீபக் மற்றும் தினாஷா என்ற தம்பதிகள் நேற்று ஹோலி கொண்டாடினர். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் நண்பர்களுடன் மிகவும் சந்தோஷமாக ஹோலி கொண்டாடிவிட்டு அவர்கள் வீட்டுக்கு சென்று உள்ளனர். இந்த நிலையில் மறுநாள் மதியம் இந்த தம்பதிகளை தொடர்பு கொள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் முயன்ற போது எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய உறவினர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது குளியல் அறையில் இருவரும் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் காவல்துறையினர் விரைந்து வந்து இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த தம்பதிகளுக்கு திருமணம் ஆகி ஒரு சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் குழந்தை பிறக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் இறந்த தம்பதிகளின் உடலில் எந்தவிதமான காயமும் இல்லை என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் தெரிவித்த போது ’இப்போதைக்கு இந்த தம்பதிகள் எப்படி இறந்தார்கள் என்று தெரியவில்லை, பிரேத பரிசோதனை அறிக்கை பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

ஹோலி கொண்டாடிவிட்டு வீட்டுக்கு திரும்பிய தம்பதிகள் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தபோது மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.