close
Choose your channels

மகனுடன் பிளாஸ்மா தானம் செய்த பிரபல இசையமைப்பாளர்!

Tuesday, September 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் நெருங்கிய உறவினரும் பிரபல இசையமைப்பாளருமான எம்.எம்.கீரவாணி அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அனைவரும் தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி அவர்கள் தற்போது பிளாஸ்மா தானம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, நான் எனது மகன் பைரவருடன் இணைந்து மருத்துவமனையில் பிளாஸ்மா தானம் செய்ய வந்துள்ளேன். தற்போது பிளாஸ்மா நன்கொடை அளித்து உள்ளேன். நன்றாக இருக்கிறது. இது ஒரு வழக்கமான ரத்ததானம் செய்வது போல மிகவும் சாதாரணமாக இருந்ததை நான் உணர்ந்தேன். இதில் சிறிதும் பயப்படத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் எம்.எம்.கீரவானி அவர்கள் தற்போது எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்.’ என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.